செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 28,000 ஆயிரம் ஆண்டுகள் பாவிக்க கூடிய நானோ டயமன் பற்றரி

28,000 ஆயிரம் ஆண்டுகள் பாவிக்க கூடிய நானோ டயமன் பற்றரி

1 minutes read

கலிஃபோனியாவில் உள்ள நிறுவனம் ஒன்று, நானோ டயமன் என்ற பற்றரிகளை கண்டு பிடித்துள்ளார்கள். குறித்த பற்றரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 28,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதனை சார்ஜ் செய்ய தேவை இல்லை. அதில் இருந்து மின்சாரம் வந்து கொண்டே இருக்கும். காரணம், இந்த பற்றரிகளுக்கு உள்ளே அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இருக்கிறது. மேலும் வைரக்கல்லை உள்ளே வைத்திருக்கிறார்கள்.

இதனூடாக நடக்கும் தொடர் கதிரியக்க தாக்கம் ஊடாக இந்த பற்றரிகள் தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்க வல்லவையாக இருக்கிறது. ஏற்கனவே 5,000 ஆண்டுகள் பாவிக்க கூடிய பற்றரிகளை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில். குறித்த கம்பெனி தயாரிக்கும் இந்த பற்றரிகள், மனித குலத்தின் கண்டு பிடிப்புகளில் ஒரு மைல் கல்லாக இருக்கிறது. ஆனால் இதனை பாவித்து அணு குண்டுகளை உருவாக்க முடியுமா ? இதனை ஒரு பெரும் வெடி பொருட்களாக தீவிரவாதிகள் மாற்ற முடியும் என்ற கருத்துகளும் எழுந்துள்ள நிலையில்.

இந்த வகையான பற்றரிகளை உடைக்க முடியாத ஒரு உலோகத்தால் தாம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More