செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் எகிப்தின் செங்கடலில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

எகிப்தின் செங்கடலில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

1 minutes read

எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணத்தில் செங்கடல் பகுதியில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலர் கடலில் குளித்துக்கொண்டிந்தனர்.

அப்போது  இரண்டு பெண்களை சுறா தாக்கியது.

சுறா தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

உயிரிழந்த 2 பெண்களும் ஒஸ்திரியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More