செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முன்னாள் ஜப்பானிய பிரதமர் இறுதிச்சடங்கு

முன்னாள் ஜப்பானிய பிரதமர் இறுதிச்சடங்கு

1 minutes read

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு நேற்று டோக்கியோவில் நடந்தது.

அபேக்கு மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடினர். பலரும் கறுப்பு ஆடையில் வந்திருந்தனர். அபேயின் நல்லுடல் ஏந்திய வாகனம் ஆலயத்திலிருந்து கிளம்பும்போது, பலர் கைதட்டி, மலர்கள் தூவினர்.

அபே பிரதமராக இருந்தபோது நாட்டில் பாதுகாப்பு இருந்தது. அவர் இப்போது இல்லாதது எங்களுக்கு வருத்தமாக இருப்பதாக இறுதி மரியாதை செலுத்த வந்த ஒருவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற மேலவைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிக்கொண்டிருந்த அபே சுடப்பட்டார். அவர் ஜப்பானில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவராவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More