செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாகிஸ்தான் உள்ளுர்வாசிகள் பொலிசார் மீது தாக்குதல்

பாகிஸ்தான் உள்ளுர்வாசிகள் பொலிசார் மீது தாக்குதல்

0 minutes read

பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த கோக்கார் கிராமத்தவர்கள் பாக்.டொல்பின் படையணியின் இரண்டு பொலிஸ் வீரர்கள் மேல் நடத்திய தாக்குதலில் அவர்கள் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இத்தகவலை வெளியிட்டிருக்கும் லாகூர் செய்தி, நிறுவனம் பயங்கரவாதியாகக் கருதி ஒரு உள்ளுர் இளைஞனை டொல்பின் படையணி சுட்டுக் கொன்றதையடுத்தே ஆத்திரமுற்ற உள்ளுர்வாசிகள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் இப்படையணி இறந்தவரின் சகோதரர்கள் மற்றும் மனைவியர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒரு பெண்மணி மரணமடைந்ததோடு இரு சகோதரர்கள் படுகாயடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More