செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸி. நாடுகள் முக்கூட்டு ஒப்பந்தம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸி. நாடுகள் முக்கூட்டு ஒப்பந்தம்

1 minutes read

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன.

அணுச்சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுசெய்ய, AUKUS கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சான் டியேகோவில் (San Diego) சந்திக்கின்றனர்.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வது அந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) ஒப்பந்தம் பாதுகாப்பு, பொருளியல் அனுகூலங்களைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் புதிய தற்காப்பு, வெளியுறவுக் கொள்கைகளை அவர் சான் டியேகோவில் விவரிக்க உள்ளார்.

ஆஸ்திரேலியா

இதேவேளை, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) தமது நாட்டின் தற்காப்புத் திறன்களை மேம்படுத்த அது மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதங்களைப் பெறப் போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களால் பல மாதங்களுக்குக் கடலுக்கடியில் வலம் வர முடியும்.

சீனாவின் இராணுவம் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் வேளையில், ஆஸ்திரேலியாவுக்கு அது கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More