ஜப்பான் பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ChatGPT-ஐ பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் என்பதால் ChatGPT பயன்படுத்தி கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் தயாரிக்க ஜப்பான் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்படாத ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் ChatGPT-ஐ பயன்படுத்தினால் தரவு முடிவுகள் திருடப்படலாம் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்போட் மிகப்பெரிய கட்டுரைகள் மற்றும் கணினி குறியீடுகளை கூட சில நொடிகளில் எழுதும் திறமை கொண்டதாக ChatGPT உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.