“வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது” என்ற எச்சரிக்கை தகவலை வழங்கி, மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு, இன்று உத்தரவு பிறப்பித்தது.
ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள், வெளியேறுங்கள் என அவசரப்படுத்தியது.
பொதுமக்கள் கட்டிடத்திற்கு அடியிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ சென்று மறைவாக பதுங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியது.
இதனால் ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை முதல் குழப்பமான நிலை காணப்பட்டுள்ளது.
[Emergency alert]
North Korea has launched a suspected ballistic missile. More updates to follow.— PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023