வேற்றுக்கிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனவும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரித்து வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் கூறியுள்ளதாவது,
“பறக்கும் பொருட்கள் பெரும்பாலானவை ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை. வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பாக எந்தவொரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
“பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. இவற்றில் எதிலும் வெளிப்படையான என்ஜின் இல்லை என்றும், வெப்ப வெளியேற்றத்தை ஏற்படுத்தவில்லை அவை ரேடாரில் மட்டும் இடையிடையே தோன்றி உள்ளன.
“அதேவேளை, வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால், மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுக்கொண்டுள்ளார்.