செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா போரின் மத்தியில் செலன்ஸ்கியின் நிலைப்பாடு

போரின் மத்தியில் செலன்ஸ்கியின் நிலைப்பாடு

1 minutes read

போரின் விளைவால் பல மக்கள் துன்பத்தை அடைந்து வரும் நிலையில்  உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கி தற்போது பல மேற்கத்தைய நாடுகளிடமும் பல விதமான உதவிகளை தம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கேட்டு வருகின்றார்.

எனினும் இந்த உதவிகள் கிடைக்கப்பெறும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டு சிலவகை கிடைக்கப்பெற்றாலும் சில உதவிகள் முழுமையாக கிடைக்காமல் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் செலன்ஸ்கி ரசியாவை  சாடி வருகிறார். அது ரசியா அணுஆயுதம்  பயன் படுத்துவோம் என்பதை நிறுத்த வேண்டும் மேலும் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வந்தோம் என்றும் சோர்ட் ராக் ,நீயூக்ளியன்ஸ் பயன்படுத்துவோம் என்று ரசியா கூறியதையும் சுட்டி காட்டியுள்ளார்.

ஆனால் இந்த போர் நடுவில் செலன்ஸ்கி இணைய இருந்த முடிவால் தான் ஏற்பட்டது. அப்போது  செலன்ஸ்கி சொந்த நாட்டு பிரச்சனையில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றார் . இதை தான் ரசியா அணு ஆயுத வாய்ப்பு எங்கள் சொந்த பிரச்சனை என்கின்றது . மேலும் ரசியா ஐரோப்பிய ஒன்றியம் முழுதும் அணு ஆயுதம் விதைக்கப்பட்டுள்ளதென்றும் வட கொரியா போன்ற நாடு மிஞ்சி இருப்பது அணு ஆயுதத்தால் என்றும் எனவே இது  பெரியநாட்டின் பிரச்சனை என்று பதிலடியையும் கொடுத்துள்ளது.

மேலும் உக்ரைன் மக்கள் மற்றும்  செலன்ஸ்கி எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று கருங்கடல் தானிய ஏற்றுமதி உக்ரைன் மக்களின் பணவருவாய்  தீர்மானிக்கும் இந்த பொருளாதாரத்தை சரி செய்ய எந்த மேற்கத்தைய நாடும் கை  கொடுக்க தயாரில்லை காரணம் இதனால் தமக்கு பிரச்சனைகள் வரும் என்பதே அவர்கள் கூறும் விளக்கம் ஆனால் 2023 கடைசி வரைக்கும் அதை பெற ரசியா தாயார் என கூறியுள்ளது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More