செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா புழுதி புயலால் ஏற்பட்ட வாகன விபத்து

புழுதி புயலால் ஏற்பட்ட வாகன விபத்து

0 minutes read

புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து  ஒன்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிகாகோவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபார்மர்ஸ்வில்லி நகருக்கு அருகே இண்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது,அங்கு திடீரென பலத்த காற்று வீசியதை தொடர்ந்து புழுதிப் புயல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் போனது.

இதன் காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகவும், நேர் எதிராகவும் மோதி உருக்குலைந்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More