செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவால் ரத்தான குவாட் உச்சிமாநாடு

அமெரிக்காவால் ரத்தான குவாட் உச்சிமாநாடு

0 minutes read

குவாட் உச்சிமாநாடு ரத்தானது. ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்துஇந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பானின் புமியோ கிஷிடா ஆகியோர் மே 24ஆம் திகதியன்று ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடன் நெருக்கடி பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதால், தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து, குவாட் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் அறிவித்துள்ளார்.

எனினும், வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஜப்பானில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More