செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லண்டன் வீதியில் குழப்பம் விளைவித்த ஆண்கள் கைது

லண்டன் வீதியில் குழப்பம் விளைவித்த ஆண்கள் கைது

0 minutes read

லண்டன் Wembley பொலிஸ் வாகனம் உள்ளிட்ட கார்கள் மீது இளைஞர்கள் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு 7.10 மணியளவில் Engineers Wayயில் சாரதிகள் செல்ல முற்படுகையில், ஆண்கள் குழு உள்வரும் போக்குவரத்தைத் தடுப்பது மற்றும் கார்களை உதைப்பதை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்தன.

முகமூடி அணிந்த இளைஞர்கள், பொலிஸ் வாகனம் மீது பொருட்களை வீசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் குழப்பம் இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறை சீர்கேடு மற்றும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More