செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; 3 அகதிகள் பலி

கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; 3 அகதிகள் பலி

0 minutes read

கிரீஸ் நாட்டின் மைக்கோனோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12-க்கும் மேற்பட்டோர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் உள்நாட்டு போர், வறுமை ஆகிய காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக செல்கின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் அவர்கள் கடல் வழியாக சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதில் பல பயணங்கள் விபத்திலேயே முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More