செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா காடுகளை அழிப்பதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம்

காடுகளை அழிப்பதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம்

0 minutes read

காடுகளை அழிப்பதற்கு எதிரான புதிய சட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தால் நடைமுறைப்படுத்தவுள்ளது.

எதிர்வரும் 2 ஆண்டுக்குள் இப்புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை, மலேசியாவும் இந்தோனேசியாவும் எதிர்க்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த வாரம் பிரசல்ஸில் நடக்கவுள்ள கூட்டத்தில் குறித்த இரு நாட்டு அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறவுள்ளனர்.

“புதிய சட்டம் பாரபட்சமானது; அது செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிரானது” என மலேசியாவும் இந்தோனேசியாவும் கூறி வருகின்றன.

அது சிறு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் விநியோகத் தொடரிலிருந்து அவர்களை விலக்கிவிடும் என்றும் மலேசியாவும் இந்தோனேசியாவும் கூறி வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More