செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் பாலியல் கல்வி

இங்கிலாந்தில் நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் பாலியல் கல்வி

0 minutes read

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வியை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து இந்த ஆய்வு நடைபெறும்.

கன்சர்வேடிவ் எம்.பி மிரியம் கேட்ஸ் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற கிராஃபிக் உடன் பாலியல் பாடங்கள் கற்பிக்கப்படுவதாகக் கூறியதை அடுத்து, பிரதமர் ரிஷி சுனக், கடந்த மார்ச் மாதம் மதிப்பாய்வை அறிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட கல்விச் செயலர் கில்லியன் கீகன் “குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பே எங்கள் முழு முன்னுரிமை. சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களுடன், நிபுணர் குழுவின் உதவியுடன் மறுஆய்வு முன்னெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு அவர்களால் புரிந்துகொள்ள முடியாத அல்லது அவர்களின் வயதுக்கு பொருத்தமற்ற விடயங்கள் கற்பிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More