குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் (Indiana Ophthalmics) என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, மருந்தக – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக மருந்தக சங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு, அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.