இங்கிலாந்தில் 16 வயது சிறுமி உட்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள 64 வயது முதியவர் ஒருவர், 189 நாட்களுக்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் நீதிமன்றத்தில் இந்த விசித்திர வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
வேலைக்கு செல்வோர், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செய்பவர்கள் என பெண்கள் போகிற வழியில் பின் தொடர்ந்து கையில் கேமராவுடன் வரும் குறித்த முதியவர், அவர்களிடம் கேமராவை கொடுத்து தன்னை படம் எடுத்து தர சொல்வார். அவர்களும் அதனை செய்து முடித்ததும், 2 பேரும் சேர்ந்து படம் எடுத்து கொள்ளலாம் என அடுத்து கூறுவார். இப்போது அந்த பெண்கள் தயக்கத்துடன் நிற்கும்போது, அவர்களை பற்றி கொண்டு, கையில் முத்தமிட்டு உள்ளார். தொடர்ந்து, வாயிலும் முத்தமிட முயன்று உள்ளார் என வழக்கு விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சான்றுகள் இல்லாமல் விசாரணை தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில், 7 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விசயங்களை மிர்சா ஒப்பு கொண்டுள்ளார்.
இதனை தொடந்து, அவர் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மின்னணு சாதனம் உதவியுடன் அவர் கண்காணிக்கப்படுவார். 2 ஆண்டுகளுக்கு சமூக பணியிலும் அவர் ஈடுபட வேண்டும். இதனை ஒருவர் மேற்பார்வை செய்வார்.
தவிர, சம்பளம் இல்லாமல் 252 மணிநேரம் வேலையிலும் ஈடுபட அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.