செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கத்தோலிக்க சபைக்கு 21 புதிய கர்தினால்கள் – போப் அறிவிப்பு

கத்தோலிக்க சபைக்கு 21 புதிய கர்தினால்கள் – போப் அறிவிப்பு

0 minutes read

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் கர்தினால்கள் உள்ளனர். இவர்களே போப் ஆண்டவரை தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேராயர்கள், புதிய கர்தினால்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த அறிவிப்பை போப் பிரான்சிஸ் வத்திகானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்த வாராந்திர நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்தினால்களில் அர்ஜென்டினாவை சேர்ந்த பேராயர் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கியமானவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதைத்தவிர, கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராக உள்ள ஹாங்காங்கை சேர்ந்த பேராயர் ஸ்டீபன் சாவ்-யான் சோவ், ஜெருசலேமை சேர்ந்த பியர்பாட்டிஸ்டா பிஸபெல்லா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்கள் 21 பேரும் செப்டெம்பர் 30ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக நியமிக்கப்படவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More