செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் அவுஸ்திரேலியா

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் அவுஸ்திரேலியா

0 minutes read

அமெரிக்காவிடம் இருந்து சுமார் 54,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை வாங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

4 என்ஜின்கள் கொண்ட இந்த முதல் ஹெர்குலஸ் விமானம், 2027ஆம் ஆண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவும், அமெரிக்காவும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவுஸ்திரேலிய கடற்கரையில் கூட்டுப்போர்ப் பயிற்சியை நடத்தி வருகின்றன.

இந்த வருடம் 30,000 இராணுவ வீரர்கள் இப்பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையிலேயே, அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதன்மூலம் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப் படைக்கான திறன் மற்றும் இயக்கம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் பாட் கான்ராய் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More