செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இனி வாடகை வீட்டில் குடியிருப்போரை விரட்டும் வீட்டு உரிமையாளர் கைதாகலாம்!

இனி வாடகை வீட்டில் குடியிருப்போரை விரட்டும் வீட்டு உரிமையாளர் கைதாகலாம்!

1 minutes read

லண்டனில் ஆண்டொன்றிற்கு சுமார் 8,000 பேர், வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வீடுகளை விட்டு சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவதாகவும், அவர்களில் சிலர் மட்டுமே அது குறித்து பொலிஸில் புகார் செய்வதாகவும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இனி வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களை, தேவைப்பட்டால் கைது செய்யலாம் என லண்டன் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட உள்ளது.

வீட்டு உரிமையாளர் ஒருவர், வாடகைக்கு விட்டுள்ள வீட்டில், தன் விருப்பப்படி குறித்த வீட்டின் பூட்டை மாற்றினாலோ, வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவரை பலவந்தமாக வெளியேற்றினாலோ, எரிவாயு மற்றும் மின்சார இணைப்பைத் துண்டித்தாலோ, குடியிருப்போரை அச்சுறுத்தினாலோ, அவை சட்டப்படி குற்றங்கள் என வீட்டு உரிமையாளருக்கு லண்டன் பொலிஸார் வெளிப்படையாகவே அறிவுறுத்தலாம் என்றும் புதிய விதிகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More