செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைன் மீது ரஷ்யா குண்டு வீச்சு.. 2 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு வீச்சு.. 2 பேர் உயிரிழப்பு

0 minutes read

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் இன்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழியாக குண்டுகள் வீசப்பட்டன.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தோரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கண்ணாடிகள் சிதறி ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ கூறினார்.

மேலும், இந்த குண்டுவீச்சில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More