செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் உயிரிழப்பு

அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் உயிரிழப்பு

1 minutes read

லெபனான் நாட்டில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்த அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை இறுதியில் முகாமில் வைத்து பலியானார்.

அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7ஆம் திகதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த மோதலில் ஆயுதமேந்திய போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தொடக்கத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து முகாமில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தப்பி வெளியேறி வருகின்றனர்.

அவர்களில் பலர் உள்ளூர் பள்ளிவாசல்கள், பாடசாலைகள் மற்றும் சிடான் நகராட்சிக் கட்டிடங்கள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதேவேளை, மோதல் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லெபனானில் பதிவு செய்யப்பட்ட அகதிகள் 55 ஆயிரம் பேர் உள்ளனர் என ஐ.நா அமைப்பு தெரிவிக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More