1948ஆம் ஆண்டு பிறந்த இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ், இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) தனது 75ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
இதனையொட்டி, உணவு வறுமையைச் சமாளிக்கவும் உணவு வீணாக்குவதைக் குறைக்கவும் ஒரு புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் வெளிப்படையான பிரச்சாரகராகவும், நிலையான பொருளாதாரத்தை ஆதரிப்பவராகவும் இருந்து வரும் மன்னர், மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுக்கும் தனது பணியான ‘முடிசூட்டு உணவுத் திட்டத்தை’ அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார்.
“உணவுத் தேவை என்பது உணவுக் கழிவுகளைப் போலவே உண்மையானது மற்றும் அவசரமானது – மேலும் அவற்றுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்க ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டால், அது இரண்டு பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்க்கும்” என மன்னர் சார்லஸ், தெரிவித்தார்.
இதேவேளை, மன்னரின் 75ஆவது பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் நாணயமும் வெளியிடப்பட்டுள்ளதாக The Royal mint தெரிவித்தது.