செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கடும் வெப்பத்தால் 5 மடங்கு மக்கள் மரணிக்கலாம்; நிபுணர்கள் எச்சரிக்கை!

கடும் வெப்பத்தால் 5 மடங்கு மக்கள் மரணிக்கலாம்; நிபுணர்கள் எச்சரிக்கை!

0 minutes read

தற்போதுடன் ஒப்பிடுகையில் கடும் வெப்பம் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ரீதியில் சுமார் 5 மடங்கு மக்கள் மரணிக்கலாம் என்று அனைத்துலக நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக மக்களின் சுகாதாரம் பாரிய விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அக்குழு எச்சரித்துள்ளது.

மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களில் கடும் வெப்பமும் ஒன்று என The Lancet Countdown எனும் ஆய்வு அமைப்பின் வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதிக வறட்சி காரணமாக மில்லியன் கணக்கானோர் பட்டினியால் வாட நேரிடலாம்; கட்டுக்கடங்காத கொசுப் பரவல், தொற்று நோய்களை அதிகரிக்கக்கூடும்; அவற்றால் சுகாதாரக் கட்டமைப்பு கடும் நெருக்குதலுக்கு உள்ளாகும்” என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னணி ஆய்வாளர்களும் கல்வி நிலையங்களைச் சேர்ந்தோரும் குறித்த மதிப்பீட்டில் பங்கெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More