செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கர்ப்பிணிப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்திய நபர்

கர்ப்பிணிப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்திய நபர்

1 minutes read

District Line Tube-ல் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணை தட்டி மிரட்டி துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மே 26 அன்று இரவு 10.45 மணியளவில் வீட்டிற்குச் சென்ற இரண்டு பெண்களை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண்ணைத் தட்டி, கையில் இருந்த பானத்தை ஊற்றினார்.

பின்னர் அவர் மற்றொரு பெண்ணையும் துஷ்பிரயோகம் செய்ததுடன், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார் என, பிரித்தானிய போக்குவரத்து பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சந்தேக நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது வேறு ஏதேனும் தகவல் இருந்தால், 61016 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது மே 27 இன் 754 என்ற மேற்கோள் மூலம் 0800 40 50 40 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், 0800 555 111 என்ற எண்ணில் அநாமதேயமாக அழைத்து தகவலை தெரிவிக்கவும் முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More