செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மீண்டும் தலையெடுத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று

மீண்டும் தலையெடுத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று

0 minutes read

அமெரிக்காவில் பொதுமக்கள் நால்வருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும், அமெரிக்காவின் கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் ஊழியர்கள் ஆவர். மற்றுமொரு நபருக்கும் H5N1 பறவைக் காய்ச்சல் தொற்றியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மனிதர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்றும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் தெரிவித்தது. கிருமி உருமாறி, மக்களிடையே எளிதில் பரவக்கூடிய தன்மையைப் பெற்றால் பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது.

புதிய H5N1 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் ஆராயப்படுகின்றன.

நோய்த் தொற்றியவர்களுக்குத் தற்போது சாதாராண அறிகுறிகளே உள்ளன. கண்கள் சிவந்திருப்பதாகவும், கண்களில் எரிச்சல் இருப்பதாகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களுக்கு சுவாசப் பிரச்சினைகளும் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More