செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து; இலங்கையர்கள் உட்பட 16 பேரை காணவில்லை

எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து; இலங்கையர்கள் உட்பட 16 பேரை காணவில்லை

0 minutes read

ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பணியாளர்கள் 16 பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஓமான் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர்.

திங்கட்கிழமை ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் ஏடன் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் எண்ணெய் கசிவு குறிந்த எந்தத் தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், குறுகிய கடல் பயணத்துக்கானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More