செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு; தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு; தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

0 minutes read

அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில், இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற நாட்டின் பிரபலமான முற்போக்கு மூவ் ஃபார்வர்ட் கட்சியை நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More