செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நோர்வேயில் சடலமாக கரையொதுங்கிய ‘உளவு திமிங்கலம்’

நோர்வேயில் சடலமாக கரையொதுங்கிய ‘உளவு திமிங்கலம்’

1 minutes read

ரஷ்யாவால் உளவாளியாக பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் பெலுகா (Beluga) வகைத் திமிங்கலம், நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“ஹ்வால்டிமிர்” (Hvaldimir) என்ற புனைப்பெயர் கொண்ட இந்த திமிங்கலத்தின் உடல், தென்மேற்கு நகரமான ரிசாவிகாவில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்து, பரிசோதனைக்காக அருகிலுள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த திமிங்கிலம் முதன்முறையாக 2019ஆம் ஆண்டு நார்வேயில் கரைக்கு அப்பால் கண்டறியப்பட்டது. அப்போது அதில் விசித்திரமான இருக்கை பொருத்தப்பட்டிருந்தது. அதில் “Equipment St. Petersburg”, அதாவது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கருவி என்றும் எழுதப்பட்டிருந்தது.

அந்தத் திமிங்கிலம் தப்பியிருக்கலாம் என்றும் அதற்கு ரஷ்யக் கடற்படை பயிற்சி அளித்திருக்கலாம் என்றும் நோர்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், ஹ்வால்டிமிர் ரஷ்ய இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற கூற்றை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. கடல் பாலூட்டிகளை உளவாளிகளாகப் பயிற்றுவிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று முன்பு அது மறுத்துள்ளது.

சுமார் 15 வயதுடைய இந்த திமிங்கலம் எதனால் இறந்தது என்பது தெரியவில்லை. அதன் உடலில் எந்தக் காயங்களும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒரு திமிங்கலத்தின் ஆயுட்காலம் 60 வருடங்கள் ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More