அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பை சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரு சில வாரங்களில் அங்குச் செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர்.
புதிய நிர்வாகத்துடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள மோடி அங்கு பயணிக்கின்றார்.
அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லும் மோடி தனது இரண்டு நாள் பயணத்தின்போது வர்த்தகம், எரிசக்தி மற்றும் தற்காப்பு போன்ற விவகாரங்களை விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் தலைவர்களும் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடினர். நம்பிக்கை அடிப்படையிலான உறவைக் கட்டிக்காக்க இருவரும் உறுதிபூண்டனர்.
நியாயமான இரு தரப்பு வர்த்தக உறவை எட்டுவதன் முக்கியத்துவத்தை டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், QUAD கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். QUAD அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 04 நாடுகள் உள்ளன.