அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் முக்கிய பணிகளில் இருந்த 23 பேர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்தார். தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் கேத்ரின் கால்வினும் உள்ளடங்குகின்றார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரச அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.
அத்துடன், நாசாவில் வானிலை மாறுபாடு எனும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கெனவே கூறி வந்த நிலையிலேயே, நாசாவில் இருந்து 23 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.