கனடாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கனடா பொதுத் தேர்தலில் சீனா தலையிடும் சாத்தியம் அதிகம் இருப்பதாக கனடா பாதுகாப்பு உளவுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு அதிரடியாக பதிலளித்த சீனா, கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : டிரம்ப்பின் மிரட்டல்களை சமாளிக்க திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர்!
கனடாவின் பொதுத் தேர்தலில் சீனா மாத்திரம் இல்லாமல் ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலையீடுகளும் இருக்கும் என்றும் கனடா பாதுகாப்பு உளவுச் சேவைப் பிரிவு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அவரின் மிதவாதக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.