இஸ்ரேலின் வரலாறு காணாத அளவுக்கு ஜெருசலேம் நகரில் பெரிய காட்டுத் தீ, நேற்று முன்தினம் (30) முதல் பரவி வருகிறது.
இதனால், கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பலர் வீதிகளில் வாகனங்களை விட்டுச் செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார்.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவெனக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதேவேளை, இஸ்ரேலிலுக்கு உதவும் பொருட்டு, அண்மித்துள்ள ஐரோப்பிய நாடுகள் ஹெலிகெப்டரில் மீட்புக் குழுவை அனுப்பிவைத்துள்ளன.