செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர் | சீன அதிகாரிகள்

ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர் | சீன அதிகாரிகள்

1 minutes read

சீனாவின் செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொரிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர்.முன்னதாக, அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா வலியுறுத்தியதால், சீனாவின் செங்டூ நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டது.

இதையடுத்து, அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் வெளியேறிய பின், முழு கவச உடையில் களமிறங்கிய சுகாதாரத்துறை பணியாளர்கள், கிருமி நாசினியால் வளாகத்தை தூய்மை படுத்தினர். தூதரகத்துக்கு வெளியே போக்குவரத்தை தடை செய்த காவலர்கள், சீன கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More