செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கிரீஸ் ரயில் விபத்தையடுத்து வெடித்த போராட்டங்கள்

கிரீஸ் ரயில் விபத்தையடுத்து வெடித்த போராட்டங்கள்

1 minutes read

43 பேர் உயிரிழந்த ரயில் விபத்து குறித்து கிரீஸில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பலர் இது நடக்கக் காத்திருந்த ஒரு விபத்தாகக் கருதுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பேரழிவு நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தெசலோனிகி மற்றும் லாரிசா நகரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை ஊடாக நீதி வழங்கப்படும் என, அரசாங்கம் கூறியுள்ளது.

பயணிகள் சேவை ரயில் – சரக்கு ரயிலில் நேருக்கு நேர் மோதியதால், முன் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முன் பெட்டிகள் பெரும்பாலும் சேதமடைந்தன. அதில் பயணித்த 350 பயணிகளில் பலர், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் நோன்பைக் கொண்டாடி நீண்ட வார இறுதியில் ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு திரும்பிய 20 வயது மாணவர்களாக இருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More