செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தியாவில் உயரும் கொரானா தொற்று.

இந்தியாவில் உயரும் கொரானா தொற்று.

1 minutes read

கேரளாவில் மீண்டும் 5 பேருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து நாட்டில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே முதல் கொரானா நோயாளியை அடையாளம் காட்டிய கேரளாவில் இப்போது மேலும் 5 பேருக்கு அதன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரில் 3 பேர் கடந்த 29 ஆம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.

உறவினர்களான எஞ்சிய 2 பேருக்கு இவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளது.இதனிடையே சீனாவுடன் எல்லைத் தொடர்புள்ள அருணாச்சல் பிரதேச இடங்களுக்குச் செல்ல வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதி பயண உரிமங்களை உடனடியாக ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால்
39 பேருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து அதை உறுதிப்படுத்தும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More