செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ரூ.45,000 கோடி நஷ்டத்தை எதிர் நோக்கும் டிக்டாக் நிறுவனம்.

ரூ.45,000 கோடி நஷ்டத்தை எதிர் நோக்கும் டிக்டாக் நிறுவனம்.

1 minutes read

லாடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து, டிக்டாக், ஷேர்சாட், உள்பட 59 சீனநாட்டு செயலிகளைத் தடை விதித்தது இந்திய அரசு. இதனால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 20 கோடி இந்தியர்கள் டிக்டாக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த கஸ்டமர்களையும் டிக் டாக் இழந்துள்ளது.

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த மாதத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையால் சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தான் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். சுமார் ரூ 45,000 கோடி மதிப்புக்கு இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More