செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஊரடங்கை மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலக வேண்டும்.

ஊரடங்கை மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலக வேண்டும்.

1 minutes read


பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், விதிமுறைகளை மீறி 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால், அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

கம்மிங்ஸின் மனைவிக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவரது மகனுக்கும் அது பரவினால் பெரிய ஆபத்தில் முடியும் என்பதால், குடும்பத்தினரைக் காணவே அவர் லண்டனில் இருந்து பயணம் மேற்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால், விதிகளை மீறி கம்மிங்ஸ் பயணம் மேற்கொண்டதற்கு அவர்  உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More