செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பவளப்பாறை காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடிப்பு.

பவளப்பாறை காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடிப்பு.

4 minutes read

இலங்கை வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இது வரை கண்டுபிடிக்கப்படாத மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இதற்கமைவாக வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த வீரர்களினால் காங்கேசன்துறை துறைமுக வளவில் இது வரையில் இல்லாத பவளப்பாறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறை கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசிய பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு வடக்கு கடற்படையினர் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.

 

நன்றி-navy

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More