இச் சம்பவம் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்றுள்ளது. தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் மன்னார் எழுத்தூர் பகுதியில் சுமார் 8 பேர்கள் கொண்ட குழுவினால் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு நித்திரையில் இருந்து சத்தம் கேட்டு எழுந்த கணவன், மனைவி இருவரையும் கடுமையாக தாக்கி அவர்கள் இருவரின் தொலைபேசிகளையும் பறித்த திருடர்கள் குறித்த தொலைபேசிகளை உடைத்து .
பின் இருவரையும் ஒன்றாக கட்டி வைத்து விட்டு பணம் நகைகளை கேட்டுள்ளனர்.அவர்கள் இல்லை என்று சொல்லவும் அருகில் நின்ற அவர்களுடைய பெண் பிள்ளையை பிடித்து அச்சுருத்தியதோடு, ‘உன் பிள்ளை வேண்டும் என்றால் பணம் நகை இருக்கும் இடத்தை சொல்’ என திருடர்கள் அச்சுருத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களுடைய நகை பணம் உள்ள இடங்களை கூறியுள்ளனர்.இந்த நிலையில் அவர்களின் சத்தம் வெளியில் வராமல் இருக்க அனைவரின் வாய்களும் கட்டப்பட்ட பின் வீட்டில் இருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை எடுத்து
பின் ‘வேலை முடிந்து விட்டது விடியப் போகின்றது சீக்கிரமா வாங்க’ என்று தொலைபேசியில் கூறிதும் வாகனம் ஒன்று வந்தது.குறித்த வாகனத்தில் குறித்த திருடர்கள் நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விரைவான விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற் கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.