0
தமிழரசுக்கட்சி மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் , காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன்,சரவணபவன் ,சிறிதரன் ,சிவமோகன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா,துரைரட்ன சிங்கம் சாள்ஸ் நிர்மலநாதன் , யோகேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் , இதுவரை கலந்துகொள்ளவில்லை.
இரண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளமையால் இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பிலும் மற்றும் முக்கியமான சில முடிவுகளும் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
