செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை.

அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை.

1 minutes read

வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் நடமாடிய பகுதிகள் குறித்து பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸாரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த , பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

லங்காபுர , வீரபுர , பூமாடிய, புலஸ்திகம, அபயபுர , சோமபுர , பௌத்தார்தகம , சங்கபோதிகம, அல்ஹிலால் புர, ரிஃபாய்புர , தம்பால, பட்டுநுகம ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமாடிய கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More