செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை க. பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது.

க. பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது.

1 minutes read

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9 A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில் 66.82 வீதமானோர் சித்தி பெற்றுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை 4,989 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

7,17,246 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் இரண்டு இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More