இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 03 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, தொற்றுக்குள்ளான 03 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 674 பேரில் தற்போது 510 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.