செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்.

இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்.

1 minutes read

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஐந்து முப்பது மணியளவில் நாட்டினுடைய பிரதமரை சந்திக்கின்றது

குறித்த கலந்துரையாடலில் நாட்டின் இனப்பிரச்சனை சம்பந்தமாகவும் தமிழர்களின் பிரச்சனை மறை பொருளாக அல்லது பேசப்படாத பொருளாகவும் கொரோனாவை சாட்டாக வைத்து போவதால் ஏற்கனவே ஜெனிவா மற்றும் பல சர்வதேச நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் கழிந்து செல்வதாலும் இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு சித்தார்த்தன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராசா தவிர்ந்த பன்னிரண்டு தமிழ்த் தேசியக் கூட்ப்ட்பாமைப்பின் உறுப்பினர்கள் க செல்கின்றனர்

விஜயராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ச அவர்களின் வீட்டில் குறித்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது அத்துடன் கொரோனாவின் தாக்கம் , நிவாரணப்பணிகளில் உள்ள குறைபாடுகள் அரசால் வழங்கப்படும் நிவாரணப்பணிகளை அரசியலாக்கி வழங்குதல் தொடர்பாக கலந்துரையாட இருப்பதாக மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களை தொடர்புகொண்டு குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோது தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More