செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளியில் மண்ணகழ்வை தடுக்க இராணுவ உதவியை கோர தீர்மானம்!

கிளியில் மண்ணகழ்வை தடுக்க இராணுவ உதவியை கோர தீர்மானம்!

0 minutes read

மண்ணகழ்வினை  தடுப்பதற்கு இராணுவத்தினரின் உதவி நாடப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “சட்டவிரோத மண்ணகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்டாவளை பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் நேரடி நடவடிக்கைகளினால் இயலுமானவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது, இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் சந்திப்புக்களில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளது” என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர்  எஸ்.கோகுலராஜா, மாவட்ட செயலக ஊடக ஒருங்கிபை்பாளர் எஸ்பிரேமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More