செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகரிக்கும் கொரோனா தொற்று!

அதிகரிக்கும் கொரோனா தொற்று!

0 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து இன்று மேலும் 79 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 135 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் 74 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More