செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

1 minutes read

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3111 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2889 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More