செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 5 பெண்கள் கைது

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 5 பெண்கள் கைது

1 minutes read

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 5 பெண்களை  போதைத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக போதைத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில்  திடீர்  சோதனை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே பழைய பேருந்து நிலையப்பகுதியில், விபசாரத்தில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண்களை  நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More