செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

1 minutes read

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று திங்கட்கிழமை (05) முதல்,

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நடாததப்பட்டுள்ளதாகம் பல்கலைக்கழக உபவேந்தர் ஆர்.ராகல் தெரிவித்தார்.;

நாட்டில் தற்போது கொரோன தொற்று உள்ள பிரதேசமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையிட்டு முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக,

தற்போது விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளோம்.

இதில் மருத்துவ பீடத்தில் கல்விகற்றுவரும் 16 மாணவர்களை மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள பல்கலைக்கழக விடுதியிலும் ஏனைய 45 மாணவர்கள் வந்தாறு மூலையிலுள்ள,

பல்கலைக்கழக விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More